வெளிநாடு செல்ல முயன்றவர்கள் கைது!!

 



இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய  படகு மூலம் அவுஸ்ரேலியா செல்ல முயற்சித்த 18 பேர் இராணுவத்தினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.யாழ்.பருத்தித்துறை கடற்பகுதி வழியாக இவர்கள் செல்ல முயன்றுள்ளதாக கூறப்படுகின்றது. 


இவ்வாறு கைதானவர்களில் 16 பேர் வென்னப்புவ பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் ,ஒருவர் கிளிநொச்சியை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகின்றது.


அவர்களை வீட்டில் தங்க அனுமதித்திருந்த வீட்டு உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் கைதானவர்களை பருத்தித்துறை போலிசாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.