படகு மூலம் வெளிநாடு சென்றவர்கள் கைது!!
படகு மூலம் சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முயன்ற 50 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வென்னப்புவ - கொலின்ஜாடிய பகுதியில் வைத்து இவர்கள் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளனர்.
சிலாபம், மாரவில, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு காவல்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 6 பெண்களும் 4 சிறுவர்களும் அடங்குவதாகவும் கூறப்படுகின்றது.
இன்று அதிகாலை வாகனங்களில் பயணித்துக் கொண்டிருந்த வேளையே இவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை