பாதாள உலகக்குழு தலைவர் மரணம்!!

 


கடந்த வாரம் முல்லேரியா பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தமை உள்ளிட்ட    பல்வேறு கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய  பாதாள உலகக்குழு தலைவர்  கற்குவாரி ஒன்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடவத்தை-இஹல பியன்வில பகுதியைச் சேர்ந்த துவான் சிரார் என்ற 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்த குறித்த நபரை கடுவலை பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றிற்கு ஆயுதங்களை தேடுவதற்காக அழைத்து செல்லப்பட்ட போது அங்கு குறித்த நபர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மீட்க சந்தேகநபர் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற சந்தேக நபர் கற்குவாரியில் இருந்து தவறி விழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்த பாதாள உலகக்குழுத் தலைவர் மறைந்த பாதாள உலகக்குழுவின் முக்கியஸ்தரான அங்கொட லொக்காவின் நெருங்கிய சகாவென கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.