இன்று இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம்!!

 



இன்று  இந்தியா தமது 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது.


இன்று காலை தலைநகர்  புது டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில்  இடம்பெறவுள்ளது.


இதன்போது, முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் 21 வேட்டுகள் முழங்க தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தவுத்தப்படவுள்ளது.


பிரதமர் நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 9-வது முறையாக இன்று சுதந்திர தின விழாவில் தேசியக்கொடி ஏற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


தனது உரையின் போது புதிய திட்டங்களை நாட்டு மக்களுக்கு  அறிவிப்பார் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சுதந்திர தினத்தையொட்டி இன்றைய தினம் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது.


புது டில்லியில் அமைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்காத மேடையில் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரை ஆற்றவுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.