யாழ் விமான சேவை ஆரம்பம்!!
இந்தியாவுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து மீண்டும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வரை இந்தச் சேவை முன்னெடுக்கப்படும்.
விமான சேவை அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என்று வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன் பலாலி விமான நிலையத்தில் இருந்து இரத்தமலானை விமான நிலையத்திற்கும் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. கொரோனா காலப்பகுதியில் தடைப்பட்ட விமான சேவைகள் நீண்ட நாட்களாக தடைப்பட்டுள்ளன.
இதன்போது மீண்டும் சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மேலும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய பணிகளை விரைவில் செயற்படுத்துமாறு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுத்ததாக தகவல்கள் ளெியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை