ஜெனிவா, இலங்கைக்கு விடுத்த அறிவிப்பு!!!

 


இலங்கையில் இடம்பெறும் போராட்டங்களை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் பயன்படுத்திய கண்ணீர்ப்புகை பிரயோகத்தை நிறுத்துமாறு சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனிவா மனித உரிமைகள் பேரவை, இலங்கைக்கு அறிவித்துள்ள2தாக  கூறப்படுகின்றது.

இலங்கையில் இடம்பெற்று வரும் போராட்டங்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்பட்ட கண்ணீர் புகைக் குண்டுகளில் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சு இரசாயனம் உள்ளதாக பேரவை தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த நாட்டில் பொலிஸாருக்கு கண்ணீர் புகை விற்பனை மேற்கத்திய நாடுகளால் மேற்கொள்ளப்பட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.

இந்நாட்டில் நடக்கும் போராட்டங்களை அடக்க, குறைந்தபட்ச பலத்தைப் பயன்படுத்தி பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வருவதால், பல போராட்டக்காரர்கள், கண்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.