வெளியானது அவசர காலச் சட்டம் குறித்த தகவல்!!


 நாட்டில் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் இம்மாதம் 27ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில் இனி அவசரகால சட்டம் நீடிக்கப்படாது என்ற நிலை உருவாகியுள்ளது.

காரணம் கடந்த ஜூலை மாதம் (27) நாடாளுமன்றத்தில் அவசர காலச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஓகஸ்ட் மாதம் (29) வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அவசர காலச் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஓகஸ்ட் 27ஆம் திகதி ஒரு மாதம் கழியும் நிலையில் மீண்டும் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.

எனினும் மீண்டும் சட்டம் நீடிக்கப்பட வேண்டுமாயின் நாடாளுமன்றில் நிறைவேற்றும் முன் ஒப்புதல் பெற வேண்டும். எனவே ஓகஸ்ட் 27ம் திகதிக்கு பிறகு அவசரகால சட்டம் தானாக இரத்து செய்யப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.