அடக்குமுறை நாட்டிற்கு ஆபத்து!!

 


அமைதி வழி போராட்டங்கள் மீது அடக்குமுறையை பிரயோகிப்பதானது நாட்டுக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் செயற்பாடு என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

பொதுவான கோரிக்கைகளை முன்வைத்து ஜனநாயக ரீதியில் அமைதியாக போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் தாக்குதல் மேற்கொள்வதானது அப்பட்டமான அடக்குமுறை என்றும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் சர்வதேச உதவிகளுக்காக காத்திருக்கும் நேரத்தில் இவ்வாறான அடாவடித்தனங்களில் ஈடுபடுவது நாட்டிற்கு கிடைக்கவிருக்கும் உதவிகளை தடுக்கும் செயற்பாடு எனவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் , சர்வதேச சட்டத்தை மீறி நாட்டு மக்களை மேலும் நெருக்கடியில் தள்ளும் வேலையினையினையே ஆட்சியாளர்கள் மேற்கொள்கின்றார்கள் எனவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.