நாடாளுமன்றில் பொரிந்துதள்ளிய சிறிதரன் எம்பி!


 நிர்வாகம் தெரியாத வடக்கு மாகாண ஆளுநர் சாரம் கட்டிய சண்டியன்போல் செயற்பட்டுவருகின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குற்றம் சுமத்தினார்.

  நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய சிறிதரன் எம்.பி., வடக்கு ஆளுநர்மீது சரமாரியாக விமர்சனக் கணைகளைத் தொடுத்தார். இதன்போது அவர் கூறுகையில்,

ஜீவன் தியாகராஜா என பெயர் இருந்தாலும் வடக்கு ஆளுநருக்கு தமிழ் தெரியாது என்றும், அவர் தன்னிச்சையாக செயற்படுகின்றார் என்றும் கூறினார். அத்துடன் அதிகாரிகளை வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்து, காட்டு தர்பார் நடத்துகின்றார் எனவும் விசனம் வெளியிட்டார்.

திட்டமிட்ட அடிப்படையில்தான் அவர் தமிழர் பகுதிக்கான ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தசிறைதரன் எம்பி அவரை மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதுஅம்ட்டுமல்லாது கிழக்கு ஆளுநரும் அப்படிதான் என்றும், இவர்களிடம் முறையிட்டு பயன் இல்லை எனவும் எஸ்.சிறிதரன் எம்பி தெரிவித்தார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.