யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு வகுப்புத் தடை!!


 சக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் யாழ்.பல்பலைகழக மாணவர்கள் இருவருக்கு மறு அறிவித்தல் வெளியாகும்வரை வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2ஆம் திகதி விஞ்ஞான பீடத்தை சேர்ந்த முதலாமாண்டு மாணவன் ஒருவனை பல்கலைகழக நுழைவாயிலுக்கு அருகில் வைத்து, சிரேஸ்ட மாணவர்கள் இருவர் தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்து.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பல்கலைகழக நிர்வாகம் முன்னெடுத்துள்ள நிலையில், இரு மாணவர்களுக்கும் மறுஅறிவித்தல் வரையில் வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரு மாணவர்களும் பல்கலைகழக வளாகத்தினுள்ளோ, விடுதிக்குள்ளோ உட்பிரவேசிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.