தங்கமும் வெள்ளியும் பெற்றது இலங்கை!!

 


2022ஆம் ஆண்டுக்கான தேசிய பரா தடகள போட்டியின் பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் இலங்கை பரா தடகள வீராங்கனை ஜனனி தனஞ்சனா தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.  இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்ற 4ஆவது இந்திய திறந்த நிலைப்போட்டியிலேயே அவர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.

  


அவரது குறைபாடு டி47 வகைப்பாட்டின் கீழ் வருகிறது.


இது ஒரு கையில் குறைந்த முதல் மிதமான அளவில் இயக்கம் அல்லது கை கால்கள் இல்லாததால் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கான பிரிவாகும்.


இந்த போட்டியில் தனஞ்சனா 5.01 மீற்றர் மற்றும் 690 புள்ளிகளை தாண்டி தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார்.


இதேவேளை, இதே போட்டியில் டி46 வகைப்பாட்டின் கீழ் இலங்கையின் பாரா தடகள வீராங்கனை குமுது பிரியங்கா 4.71 மீற்றர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.