நடிகர் ரஜினிகாந்த் என்ன செய்துள்ளார் தெரியுமா!!

 


இந்தியா சுதந்திரம் பெற்று  75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனைக் கொண்டாடும் வகையில் 'சுதந்திர தின அமிர்தப் பெருவிழா' என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக 'இல்லம் தோறும் தேசிய கொடி' என்ற திட்டத்தை இந்திய மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.


இதன்படி, வருகிற 13ஆம் திகதி முதல் சுதந்திர தினமான 15ஆம் திகதி வரையிலான 3 நாட்கள் தங்கள் வீடுகளில் பொதுமக்கள் மூவர்ண கொடியை பட்டொளி வீசி பறக்கச் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையே, கடந்த 2ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை அனைத்து இந்தியர்களும் தங்களுடைய சமூக ஊடக கணக்குகளில் முகப்பு படமாக தேசிய கொடியை வைக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்து இருந்தார்.


 நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தேசியக்கொடியை முகப்பு படமாக மாற்றி தன் வீட்டிற்கு முன்பு தேசியக் கொடியையும் பறக்கவிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.