கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 10 பேர் கைது!!

 


இலங்கை கடற்படையினரின் கடற்கண்காணிப்பின் போது, கடல் வழியாக வெளிநாட்டுக்குச்  சட்டவிரோதமாக செல்ல முயன்ற 10 பேர்  இலங்கை கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 


நேற்று (16) இரவு தலைமன்னார் - குருசபாடு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது இவர்களை கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.


இவர்களில், படகு ஓட்டுநர்களான இருவர் உட்பட  4 ஆண்கள்,   2 பெண்கள் மற்றும்18 வயதுக்குட்பட்ட 04 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படடுள்ளது.


சந்தேகநபர்கள் பேசாலை, உருமலை, கிளிநொச்சி மற்றும் கந்தளாய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இவர்கள் தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக  கூறப்படுகின்றது. 



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.