யாழ்.வட்டுக்கோட்டையில் வாள்களுடன் வந்த மூவரில் ஒருவர் மாட்டினார்!

 


யாழ் வட்டுக்கோட்டை சங்கரத்தை சந்தியில் வாள்களுடன் நடமாடிய 3 நபர்களை அப்பகுதி இளைஞர்கள் மடக்கிய நிலையில் தப்பி ஓடுவதற்கு முயற்சித்து விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது,


இந்த நிலையில் இருவர் தப்பி ஓடியபோதும், ஒருவர் வாள்களுடன் இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன,


குறித்த சம்பவம் நேற்றய தினம் இரவு 8.15 மணியளவில் சங்கரத்தை சந்தியில் இடம்பெற்றிருக்கின்றது.


யாழ் வட்டுக்கோட்டை பகுதியில் திருட்டு சம்பவங்கள் மற்றும் கொள்ளை சம்பவங்கள், வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றது.


இந்த நிலையில் குறித்த 3 பேர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாள்களுடன் அப்பகுதியில் நடமாடியுள்ளனர்.


இதனை அவதானித்த இளைஞர்கள் குறித்த ரவுடிகளை வழிமறிக்க முயற்சித்த நிலையில் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்த போது விபத்துக்குள்ளாகி விழுந்துள்ளனர்.


இதனையடுத்து இருவர் அங்கிருந்து தப்பி ஓடியபோதும் ஒருவர் வாளுடன் சிக்கிக் கொண்டார்.


அவரை மடக்கி பிடித்த இளைஞர்கள் யாழ் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், வாள் மற்றும் மோட்டார் சைக்கிளை பொலிஸார் கைப்ற்றி சென்றிருக்கின்றனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.