சீனாவிடம் இலங்கை கோரிக்கை!
இலங்கை வரும் சீன ஆய்வுக் கப்பலின் பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு சீன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சீன ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பலான “யுவான் வாங் 5” இந்நாட்டிற்கு வருவது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒகஸ்ட் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய வேண்டிய கப்பல், 17 ஆம் திகதி வரை அங்கே நங்கூரமிட்டிருக்கும் என்று கூறப்படுகின்றது.
குறித்த கப்பலின் வருகை குறித்து தனது கவலையை வெளிப்படுத்திய இந்தியா, உயர் தொழில்நுட்ப சீனக் கப்பலின் வருகையானது பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைவதற்காக கடந்த ஜூலை 13ஆம் திகதி சீனாவின் ஜியாங்யின் பகுதியில் இருந்து புறப்பட்ட கப்பல் தற்போது தைவானின் கடல் எல்லையை வந்தடைந்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை