நிரந்தரமாக நின்றுபோன ஆன்மா - கவிதை!!

 


எதிர்பார்த்ததை விட

மக்கள் கூட்டம் அதிகரித்து
வியாபாரம் அதிகமாய் இருந்தது.!

பட்டினி கிடந்து செய்த வியாபரம் 
அமோகமாய் போனதால் 
மனதின் மகிழ்ச்சி 
ஒட்டிய வயிற்றை நிரப்பியிருந்தது.!

வீடு திரும்புவதற்கு 
ஒரு வாகனத்தையும் காணும் 
நடந்து போனால் சாசு மிச்சம் என 
ஆறுதல் சொன்னது மனம்.!



வட்டிக்கு வாங்கிய பணத்தை 
சோற்றில் கை வைக்க முன்பு 
கொடுத்துவிட வேண்டும் என நினைக்கிறது இன்னொரு மனம்.!

வேண்டாம் 
வட்டிக்காசை விட 
பிள்ளையின் படிப்பு செலவு 
முக்கியம் என்கிறது இன்னொரு மனம்.!


எது எப்படி இருந்தாலும் 
வீடு போய் முடிவெடுத்துக்கொள்வோம் 
இதுவே இறுதியான முடிவாய் அமைந்தது.!

சேட்டின் இரண்டு கைக்குழிகள் 
கிழிந்து பொத்தான்கள் இல்லாத
ஆடையில்தான் அவரின் நிர்வாணம் 
கொஞ்சமேனும் மறைக்கப்படிருந்தது.!

வீட்டை அடைவதற்கு 
இன்னும் கொஞ்ச தூரம்தான் 
மீதமிருந்தது.!


இது பாதசாரிகளின் கடவை 
வாகனங்கள் அவதானமாக 
செல்க என எழுதப்பட்டிருந்த 

இடத்தில்தான் 

 கனரக வாகனம் அடித்து
 மூச்சடங்க செய்திருந்தது அவரை !



முனைக்காடான் குபேந்தி ரன்



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.