நீதிமன்றில் துப்பாக்கிச் சூடு!!

 


கல்கிஸை நீதவான் நீதிமன்ற கட்டடத் தொகுதியினுல், இன்று பிற்பகல் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.


நீதிமன்றில் வழக்கு விசாரணை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெளியில் இருந்து சென்ற நபர் ஒருவர், சாட்சிக்கூண்டில் இருந்தவரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

எனினும், அவரின் இலக்கு தவறியதாகவும், இந்த துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரைக் கைதுசெய்ய காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.