யாழ்தேவி ரயிலில் குடிபோதையில் ஏறியவர்களால் மோதல். நான்கு பேர் கைது!

 


மஹவ புகையிரத நிலையத்தில் இருந்து குடிபோதையில் ஏறிய நால்வர் புகையிரதத்தில் வன்முறையில் ஈடுபட்டதன் காரணமாக காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டைக்குச் சென்று கொண்டிருந்த யாழ்தேவி ரயில் சுமார் ஒரு மணிநேரம் தாமதமாக சென்றதாக ரயில்வே பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மாலை 4.10 மணியளவில் மஹவ நிலையத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்ததுடன் ரயிலுக்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பயணிகள் அவசர நேரத்தில் பயன்படுத்திய சங்கிலியை இழுத்து ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள இறுதி சமிக்ஞை கம்பத்திற்கு அருகில் ரயிலை நிறுத்தியுள்ளனர்.

அதிகளவு பயணிகளால் நிரம்பியிருந்த ரயிலில் ஏறி பயணிகளிடம் இருக்கைகளை கோரியதால் குடிபோதையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதனால் ரயில் பெட்டியில் இருந்த பயணிகளுடன் கைகலப்பு ஏற்பட்டதாகவும் பயணிகள் கூறுகின்றனர்.

இதன்போது வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டோர் ரயிலில் இருந்து இறங்கி ரயில் பெட்டியை கட்டையால் தாக்கினர். இதனால், ரயில் பெட்டியின் கண்ணாடிகள் சேதமடைந்தன.
உடனடியாக செயற்பட்ட புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பிரச்சினையில் ஈடுபட்ட நான்கு பேரையும் பிடித்து அனுராதபுரம் ரயில்வே உதவி பாதுகாப்பு அத்தியட்சகர் ஆர்.எம்.பி.ஏ. ரத்னமலலா மற்றும் அனுர பிரேமரத்ன ஆகியோரின் ஒப்படைக்கப்பட்டதுடன் இவர்களது பணிப்புரையின் பேரில் மஹவ தலைமைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.