கோர விபத்து கனடாவில் -பொலிஸ் அதிகாரி பலி!

 


கனடா - மார்க்கமில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யோர்க் பிராந்திய காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.


38 வயதான டிராவிஸ் கில்லெஸ்பி என்ற  காவல்துறை அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


டிராவிஸ் கில்லெஸ்பி வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​​​காலை 6 மணியளவில் வார்டன் அவென்யூவின் மேற்கில் உள்ள மேஜர் மெக்கன்சி டிரைவில் இடம்பெற்ற விபத்தில் அவர் கொல்லப்பட்டார்.


எங்கள் அமைப்பின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இது பேரழிவு தரும் செய்தி என்று யார்க் பிராந்திய காவல்துறைத் தலைவர் ஜிம் மேக்ஸ்வீன் தெரிவித்துள்ளார்.


டிராவிஸின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், சக ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


ஒரு உறுப்பினரை இழப்பது ஒருபோதும் எளிதானது அல்ல, எதிர்பாராத விதமாக டிராவிஸை இழப்பது மிகவும் கடினமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


கில்லெஸ்பி ஓட்டிச் சென்ற வெள்ளை நிற ஹோண்டா அக்கார்டு மற்றும் கறுப்பு நிற போர்ஷே கயென் கார் விபத்துக்குள்ளானதாக புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


சம்பவ இடத்திலேயே கில்லெஸ்பி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போர்ஷே காரை ஓட்டிச் சென்ற 23 வயதான மார்க்கம் நபர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


சாரதிகளில் ஒருவர் சென்டர் லைனைக் கடந்து எதிரே வந்த வாகனத்துடன் மோதியதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.