சாரதி அனுமதிப் பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

 


ஆறு மாத காலத்துக்கு வழங்கப்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை ஒரு வருடத்துக்கு நீட்டிக்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.


அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்காக திணைக்களத்தின் மாவட்ட அலுவலகங்கள் அல்லது வெரஹெர அலுவலகத்துக்கு செல்லுமாறு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


அனுமதிப் பத்திரம் வைத்திருப்பவர்களில் வெளிநாடுகளுக்குச் செல்லவிருக்கும் தரப்பினருக்கு மாத்திரம் சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம்  தெரிவித்துள்ளது.


அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றிடம் 450,000 அனுமதிப்பத்திர அட்டைகளை முற்பதிவு செய்துள்ளதாகவும் அடுத்த சில வாரங்களுக்குள் அவை நாட்டை வந்தடையும் என்றும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.