மக்களுக்கு நன்றி தெரிவித்த லெஜண்ட் சரவணன்!!

 


சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரின் மகனான சரவணன் அருள் அண்மையில் வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார்.


ஜே.டி - ஜெரி இயக்கத்தில் வெளியான இப்படம் உலக அளவில் 45 கோடி ரூபாவை வரை வசூல் செய்தது.

தி லெஜண்ட் படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்ற இரு முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டிவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், தி லெஜண்ட் படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்து சரவணன் அருள் ட்விட்டர் பதிவொன்றையிட்டுள்ளார்.

அப்பதிவில், வெற்றி நாயகனாக்கிய மக்களுக்கு மனமார்ந்த நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார் சரவணன் அருள்.

அவர் நடிப்பு குறித்து சில எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் அடுத்தடுத்த படங்களில் அதைச் சரிசெய்து, தொடர்ந்து நடிக்கும் முடிவில் உறுதியாக இருப்பதாகவும் லெஜண்ட் சரவணன் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.