அநாதரவாகும் குழந்தைகள் வடக்கில் திடீர் அதிகரிப்பு!!
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் தீவிரம் மற்றும் வீட்டு நிதி பற்றாக்குறை காரணமாக வடமாகாணத்தில் உள்ள சிறுவர் இல்லங்களில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை திணைக்களம் வழங்கிய புள்ளிவிபர தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில், 246 சிறுவர்கள் சிறுவர் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வடமாகாண சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை ஆணையாளர் குருபரன் இராஜேந்திரன் கூறுகையில், வடக்கில் உள்ள சிறுவர்கள் சிறுவர் இல்லங்களுக்கு அனுப்பப்படுவதற்கு பொருளாதார நெருக்கடியே நேரடி மற்றும் மறைமுக காரணியாக செயற்படுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் எதிர்கொள்ளும் நிதி சவால்கள் காரணமாக சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தைக்காக ஒதுக்கப்பட்ட மாகாண நிதி பொது திறைசேரியில் இருந்து விடுவிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேசமயம் இந்த குழந்தைகளை ஆதரிக்கவும் பராமரிக்கவும் போதுமான நிதி இல்லை, எனவே, குழந்தை பராமரிப்பு மற்றும் நன்னடத்தை துறை அவர்களை வீடுகளுக்கு அனுப்பும் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை