யாழில் வீடு புகுந்து 16 பவுண் தங்க நகை கொள்ளை!!
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் நகை மற்றும் பணம் திருடு போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
திருடன், பூட்டி இருந்த வீட்டைத் திறந்து சுமார் 16 பவுண் தங்க நகைகள் மற்றும் திருடிவிட்டு மீளவும் கதைவைப் புஶ்ரீட்டிவிட்டத் தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
வீட்டிலிருந்தவர்கள் அருகிலுள்ள இடமொன்றிற்குச் சென்ற வேளையிலேயே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் 11 பவுண் தாலிக்கொடி, 5 பவுண் காப்பு மற்றும் 19 ஆயிரம் ரூபா பணம் என்பவையே திருடப்பட்டதாக வல்வெட்டித்துறை காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மதிலால் வீட்டு வளாகத்துக்குள் நுழைந்த திருடர் முன் கதவைத் திறந்து நகைகளைத் திருடிவீட்டு மீளவும் முன் கதவை மூடிவிட்டுச் சென்றுள்ளார் என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வல்வெட்டித்துறை காவல் நிலையத்தினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை