செல்பி மோகத்தால் பறிபோன உயிர்!!
ஹல்துமுல்ல, சன்வெலி தோட்ட பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகில் “செல்பி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் குருத்தலாவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞன் தனது நண்பருடன் அருவியை பார்வையிட சென்ற நிலையில் அங்கு புகைப்படம் எடுக்க முற்பட்ட போது அவரது கால் வழுக்கி நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்துள்ளார்.
இந்நிலையில் அவர் விழுந்த இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் கீழே உள்ள நீர்வீழ்ச்சியில் இருந்து இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை