நிலக்கரி தொடர்பில் இறுதித் தீர்மானம்!!

 


நிலக்கரி கொள்வனவுக்கான மாற்று யோசனைகள் தொடர்பான கலந்துரையாடல் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடல் இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் அது தொடர்பான வழங்குனர்களுடன் இடம்பெற்றதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பல்வேறு அரசியல் மற்றும் வியாபார நோக்கங்களுக்காக நிலக்கரி கொள்வனவு செய்வது தொடர்பில் சமூகத்தில் நெருக்கடியான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறைந்த விலைக்கு நிலக்கரியை டெண்டர் முறை மூலம் கொள்முதல் செய்ய தேர்வு செய்யப்பட்ட வழங்குனர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சட்டரீதியாக தீர்க்கப்படும் வரை நிலக்கரி வழங்கலை மேற்கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இழக்கப்பட்ட லக்விஜய அனல்மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரி விநியோகத்தை மீளப் பெற்று, குறித்த தரப்பினருக்கும் நிறுவனங்களுக்கும் எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்தும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.