இலங்கை கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் டொம் மூடி!!

 


இலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக செயற்பட்டுவந்த அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் டொம் மூடி அவருடைய பதவியிலிருந்து விலகிக்கொள்வார் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.


மூன்று வருட ஒப்பந்தத்தில் இலங்கை கிரிக்கெட்டுடன் இணைந்திருந்த டொம் மூடி, தற்போது ஒன்றரை வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், அவரை பதவியிலிருந்து நீக்குவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.


இலங்கை கிரிக்கட் அதிகாரிகளுக்கும் டொம் மூடிக்கும் இடையில் இடம்பெற்ற பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.


இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின் பேரில், டொம் மூடி 2021 இல் இலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.