மகளை கொடூரமாக தாக்கிய தந்தை கைது!

 


தமது மகளை கொடூரமாக தாக்கிய தந்தையொருவர் காலி துறைமுக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


காலி-கடுகொட பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்கும் 16 வயதுடைய சிறுமி, பாடசாலையின் இரண்டு ஆசிரியைகளுடன் பொலிஸ் துறையில் செய்த முறைப்பாட்டை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.


வெயங்கொட பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர், ஆன்மீகத்தினால் நோயை குணப்படுத்துவதாக கூறி, கைத்தடியினால் தாக்கப்பட்டு உயிரிழந்த 9 வயதுடைய சிறுமி, இந்த 16 வயதுடைய சிறுமியின் சகோதரி என தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த சம்பவத்திற்கு உதவி வழங்கியதாக கூறி, சிறுமியின் தாயார் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


அதன்பின்னர் குறித்த சிறுமி, தந்தை மற்றும் அவரது பாட்டியுடன் வசித்து வந்துள்ள நிலையில், அவர் நீண்ட காலமாக தந்தையினால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளதாக வைத்திய பரிசோதனையின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


சிறுமி நீதிமன்ற உத்தரவின் படி, காலி – கித்துல்பிட்டி சிறுவர் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.


சந்தேகநபரான தந்தை, காலி நீதிவான் நீதிமன்றில் நாளை முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.