கிளிநொச்சி கொலைச் சம்பவ சந்தேக நபர் கைது!!

 




கிளிநொச்சி – பரந்தன், சிவபுரம் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் 11 மாதங்களின் பின் கைது செய்யப்பட்டுள்ளார்.


பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கடந்த வருடம் நவம்பர் மாதம் 16ஆம் திகதி சிவபுரம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் வெட்டி கொலை செய்யப்பட்டிருந்தார்.


நவம்பர் மாதம் 17 ஆம் திகதி சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ். சிவபாலசுப்பிரமணியம், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் முன் நிலையில் சடலம் உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டதை அடுத்து உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


இந்நிலையில் அந்த கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், சந்தேகநபர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.   


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.