ஊர்தியைக் கடத்திய இருவர் கைது!!

 



கொழும்பிலிருந்து ஹந்தானை நோக்கி டீசலை காவிச்சென்ற தாங்கி ஊர்தியை அதிகாலை இரண்டு மணியளவில் ஹந்தானை சந்தியில் வைத்து இனந்தெரியாத நபர்கள் கடத்தியுள்ளனர்.


முச்சக்கர வண்டியில் வருகை தந்த நால்வர் தாங்கி ஊர்தியை இடைமறித்து நிறுத்தியதோடு சாரதி மற்றும் நடத்துனரை தாக்கிவிட்டு கடத்தி சென்றுள்ளனர்.


இந் நிலையில் 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சந்தேக நபர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அத்துடன் தப்பிச்சென்றுள்ள சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்ய காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.