குருந்தூர்மலை பௌத்த பிரதேசம் என்று கொழும்பில் பேரணி!

 


குருந்தூர்மலை பிரதேசம் தமிழர்களுடையது அல்ல என தெரிவித்து கொழும்பில் இன்று பிக்குகள் பேரணியொன்றை நடத்தினர்.

முல்லைத்தீவு – தேசிய மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் இந்தப் பேரணி நடத்தப்டப்டது.

குருந்தூர்மலை பிரதேசம் தமிழர்களுடையது அல்ல, அது முழுமையாக பௌத்தர்களின் பிரதேசம் என தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகள் தமது சுயலாப அரசியலுக்காக பிரச்சினையை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.