பசித்திருக்கிறான் பார்த்தீபன்...!!

 





பசியோடு துடித்தது 

பார்த்தீபம்

இளகாது சிரித்தது 

காந்தீயம். 


கண்ணீரை வடித்தது

தமிழினம்

அண்ணன்கள் துடித்தனர்

இது நிஜம்.


செந்நீரின் வலியினை

பசித்தீயில் உருக்கியே

செங்காந்தள் இன்று

உயிர்த்தீபம் ஆனது...


ஊரெழு பெற்றவன்

தமிழ்த்தாயின் தவமகன்

அறிவுடை மருத்துவன்

சரித்திரம் ஆகினான்.


போர்கொண்ட உலகிற்கு

புது நெறி சொல்லியே

தன் இனத்தின் பிள்ளையாகி

விழிமூடிக்கொண்டானே..



கோபிகை.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.