யாழிலிருந்து சென்னை விமான போக்குவரத்து எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பம்!

 


யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமான போக்குவரத்தை இந்த மாத இறுதியில் ஆரம்பிக்கவுள்ளதாக பலாலி சர்வதேச விமான நிலையம் அறிவித்துள்ளது.விமான போக்குவரத்தை முன்னெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மான நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விமான சேவை தொடர்பில் இந்திய விமான நிறுவனத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அதன்படி, பலாலி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கான விமான போக்குவரத்தினை எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.