பாபா வாங்காவின் இந்தக் கணிப்பு நிறைவுறுமா!!

 


பூமியின் வெப்ப நிலை காரணமாக வெட்டுக்கிளி தாக்குதல் நடக்கும் என்றும் இது இந்தியாவில் பயிர்களைத் தாக்கி அழிக்கும் என்றும் பாபா வாங்கா கூறியுள்ளார்.

 நாட்டில் பஞ்சம் மற்றும் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து உள்ளதாக பாபா வாங்கா குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அண்மைய ஆண்டுகளில் இதுபோன்ற வெட்டுக்கிளித் தாக்குதல் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாபா வாங்கா 2022 ஆம் ஆண்டிற்கான கணிப்பில் சில நாடுகள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இத்தாலியும் மிக மோசமான வறட்சியைச் சந்தித்தது. அதே போல் 2022 ஆம் ஆண்டில் ஆசியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வெள்ளம் ஏற்படும் என்று பாபா வாங்கா கணித்துக் கூறியிருந்தார்.

இவர் கூறியது போன்றே, அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் அடுத்து வரும் ஆண்டுகள் அதாவது 2023இல் பூமியின் சுற்றுப்பாதை மாறும் என்றும் 2028இல் வெள்ளிக் கிரகத்துக்கு(வீனஸ்) விண்வெளி வீரர்கள் பயணம் செய்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேபோல 2046இல் உறுப்பு மாற்றுத் தொழில்நுட்பம் காரணமாக மக்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்வார்கள் என்றும் அவர் கணித்தார்.

மேலும் 2100இல் முதல்,செயற்கை சூரிய ஒளி காரணமாகப் பூமியில் இரவு என்பதே இருக்காது என்றும் பாபா வாங்கா கணித்துள்ளதாகக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.