காத்திருக்கும் கப்பல் - எரிசக்தி அமைச்சரின் அறிவிப்பு!!

 


கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள மசகு எண்ணெய் கப்பலுக்கு இதுவரை பணம் செலுத்த முடியவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 10ஆம் திகதி இலங்கைக்கு வந்த இந்தக் கப்பல் 100,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெயை இலங்கைக்குக் கொண்டு வந்த நிலையில் கப்பல் இலங்கைக்கு வந்து 32 நாட்கள் ஆகின்ற நிலையில் அக்கப்பலுக்கு பணம்  பணம் செலுத்த முடியவில்லை என   அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எக்ஸ்டோ எனப்படும் இந்த மசகு எண்ணெய் மூலம் டீசல் மற்றும் பெற்றோலை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடியும் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், இலங்கை வந்தடைந்த 36,000 மெட்ரிக் தொன் பெற்றோல் கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டதையடுத்து, அதன் இருப்புகளை இறக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.