சுதந்திரதினம் குறித்து ஜனாதிபதி தெரிவித்த கருத்து!!
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை தேசிய மற்றும் மத ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் பெருமையுடன் கொண்டாட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
'ஒன்றாக எழுவோம்' என்ற தொனிப்பொருளில், 75 ஆவது சுதந்திர தின நிகழ்வை அடுத்த ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி காலிமுகத்திடலில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
75 ஆவது சுதந்திர தின நிகழ்வின் ஏற்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை