மக்கள் மீது மேலும் வரிச்சுமை!!
எதிர்வரும் சில தினங்களில் மேலும் பல வரித் திருத்தங்களைக் கொண்டுவர அரசாங்கம் தயாராகி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
2022-2025 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கான நிலக்கரி கொள்வனவு செயற்பாடுகள் தொடர்பிலான விசேட கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை அரசாங்கக் கணக்கீடு தொடர்பான செயற்குழுவின் தலைவராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்ததன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட்ட உறுப்பினர்கள் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கும் கோப் குழுவிற்கும் நியமனம் செய்யாமை தொடர்பில் சபையில் விவாதம் இடம்பெற்றது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கோப் குழுவிற்கு தனது கட்சியால் பரிந்துரைக்கப்பட்ட கலாநிதி ஹர்ஷ டி சில்வாவுக்குப் பதிலாக, நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத்தை முன்மொழிந்த நிலையில் இந்த விவாத நிலை தோன்றியது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை