குழந்தை நட்சத்திரத்திற்கு ஏற்பட்ட பரிதாப முடிவு!


 ஒஸ்கார் விருதுக்கு செல்லும் திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரத்திற்கு பரிதாப முடிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இந்த ஆண்டு இந்தியாவின் சார்பில் ஒஸ்கார் விருதுக்கு  குஜராத் மொழி திரைப்படமான ‘ஷெல்லோ ஷோ’ தேர்வு செய்யப்பட்டது என்பது தெரிந்ததே. இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ராகுல் என்பவர் கடந்த சில நாட்களாக லுகேமியா என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இது ஒரு வகை எலும்பு புற்றுநோய் என்று கூறப்படுகிறது.


இந்த நிலையில் குழந்தை நட்சத்திரம் ராகுல் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவிற்கு இந்திய திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


ராகுல் நடித்த ’ஷெல்லோ ஷோ’ என்ற திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு செல்ல இருக்கும் நிலையில் இந்த படம் வரும் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை பார்த்த பின்னரே இறுதி சடங்கை செய்வோம் என அவரது தந்தை கூறியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


அக்டோபர் 14ஆம் தேதி ’ஷெல்லோ ஷோ’ திரைப்படம் வெளியானவுடன் எங்கள் குடும்பத்தின் வாழ்க்கையே மாறும் என்று அடிக்கடி ராகுல் கூறுவார் என்றும், ஆனால் அந்த படம் ரிலீசாகும் முன்பே அவர் எங்களை விட்டு பிரிந்து விட்டார் என அவரது தந்தை மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.