தாமரைக்கோபுர நேரம் நீடிப்பு!!


 கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையாளர்களுக்காக திறக்கும் நேரம் மீண்டும் திருத்தப்பட்டுள்ளது.


அதன்படி, திங்கள் முதல் வெள்ளி வரை காலை 09 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படும் என்றும் பார்வையாளர்கள் இரவு 10 மணி வரை தாமரை கோபுர வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவர் என்றும் தாமரைக் கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.


சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதிச்சீட்டுகள் வழங்கப்படும். குறித்த இரண்டு நாட்களிலும் இரவு 11 மணி வரை தாமரை கோபுரத்தை பார்வையிட முடியும் என அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.


அதேசமயம் பாடசாலை சிறப்புச் சுற்றுலாக்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உத்தியோகபூர்வ வருகைகள் முன்கூட்டியே முன்பதிவு செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேவேளை தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம், இம்மாதம் 90 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.