தால் இட்லி!!

 



தேவையானவை: 
துவரம்பருப்பு - ஒரு கப், 
பச்சரிசி,
 உளுத்தம்பருப்பு - தலா கால் கப், 
வெந்தயக் கீரை - சின்னக்கட்டு, 
பச்சை மிளகாய் - 3 (அல்லது காரத்துக் கேற்ப), 
இஞ்சி - சிறு துண்டு (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்), 
எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், 
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, 
நெய், எண்ணெய் ­- சிறிதளவு, 
உப்பு - தேவையான அளவு.


செய்முறை: 

வெந்தயக் கீரை, பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும். துவரம்பருப்பு, பச்சரிசி, உளுத்தம் பருப்பை ஒன்றாக ஊறவைத்து சற்று கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவில் பச்சை மிளகாய், கீரை, இஞ்சி, எலுமிச்சைச் சாறு, மஞ்சள்தூள், உப்பு,  நெய் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு, இட்லித்தட்டில் எண்ணெய் தடவி மாவை விட்டு ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.


இந்த இட்லிகளை சதுரம் சதுரமாக கட் செய்து சட்னி அல்லது இட்லி மிளகாய் பொடியுடன் பரிமாறவும்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.