கணவனை,பொலிஸாரிடம் ஒப்படைத்த மனைவி!!

 


விற்பனை செய்வதற்காக வீட்டில் மறைத்து வைத்திருந்த ஐஸ் மற்றும் கஞ்சா எனக் கருதக்கூடிய பார்சலொன்றுடன் தனது கணவனை, மனைவி பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.


இந்த சம்பவம்  இரத்தினபுரி மாவட்டத்தின்   ரக்வான, உக்வத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

 

கடந்த 23 ஆம் திகதி இரவு சந்தேக நபரான கணவர், தனது மூன்று பிள்ளைகளையும் மனைவியையும் தாக்கியுள்ளார்.


கணவன் போதைவஸ்து விற்பனை செய்வதற்கு மனைவி எதிர்ப்பு தெரிவித்ததாலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.


கணவனின் தாக்குதலால் ஆத்திரமுற்ற மனைவி , ரக்வான பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்தும் அவர்கள் வராத காரணத்தால், பொலிஸ் அவசர இலக்கத்துக்கு அழைப்பு எடுத்து சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.


இதனை அடுத்து இரவு வீட்டுக்கு வந்த பொலிஸாரிடம் கணவன் மறைத்து வைத்திருந்த போதைப்பொருள் பார்சலை ஒப்படைத்த நிலையில் பொலிஸார் கணவனை கைது செய்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.