ஜனாதிபதி ரணில் வெளிநாடு பயணம்!!
காலநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வார இறுதியில் எகிப்து செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் சனிக்கிழமை (5) முதல் நவம்பர் 9 ஆம் திகதி புதன்கிழமை வரை ஜனாதிபதி எகிப்தில் தங்கியிருப்பார்.
ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன மற்றும் ஜனாதிபதியின் சர்வதேச உறவுகளின் பணிப்பாளர் தினூக் கொழும்பகே ஆகியோரும் இந்த விஜயத்தில் ரணிலுடன் இணைந்து கொள்ள உள்ளனர்.
முன்னதாக க ஜனாதிபதி பிரிட்டிஷ் மற்றும் ஜப்பானிய சுற்றுப்பயணங்களில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை