இரண்டு மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை!!
தேசிய கட்டிடவியல் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு எதிர்வரும் 24 மணித்தியாலங்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய களுத்துறை மாவட்டத்தில் இங்கிரிய, புலத்சிங்கள, வளல்லாவிட்ட, பாலிந்த நுவர மற்றும் தொடங்கொடை ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரிய மாவட்டத்தில் எஹெலியகொடை, குருவிட்ட, இரத்தினபுரி, எலபாத்த, அயகம, கிரியெல்ல, பெல்மடுல்ல, கலவானை, நிவித்திகல, ஆகிய பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயத்திற்குட்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை