இலங்கை வருகிறார் நடிகர் சூர்யா!!


 


சூர்யா - 42 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இலங்கையிலும் இடம்பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.


நியூஸ் - 18 என்ற இந்திய செய்தித்தளம் இதனைத் தெரிவித்துள்ளது.  தமிழக திரைப்பட நடிகர் சூர்யாவின் எதிர்பார்க்கப்படும்  சூர்யா - 42 படப்பிடிப்பிற்காகவே அவர் வரவுள்ளதாக கூறப்படுகின்றது. 


ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் இதற்கான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


அத்துடன், கோவா - சென்னை ஆகிய இடங்களிலும் படப்பிடிப்புகளுக்கான தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இதன் மத்தியிலேயே, இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இலங்கையின் வனப்பகுதிகளில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சூர்யா - 42 திரைப்படம் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கதையை கொண்டிருக்கும் என சினிமா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இத்திரைப்படத்தின் கதாநாயகியாக பொலிவூட் நடிகை திரிஷா பதானி நடிக்கவுள்ளார்.


2023ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடையவுள்ளன.


ஐரோப்பாவின் பல்கேரியா - செர்பியா போன்ற நாடுகளும், கம்போடியா - வியட்நாம், தாய்லாந்து மற்றும் பிஜி ஆகிய நாடுகளிலும் மூன்று நாடுகள் படப்பிடிப்புக்காக தெரிவு செய்யப்படவுள்ளன.


பாரிய நிதி செலவில் தயாரிக்கப்படும் இந்தப்படத்தில் சூர்யா 5 கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளார்.


இரண்டு பாகங்களாக 10 மொழிகளில் இத்திரைப்படம் உருவாகவுள்ளது.


இதேவேளை, சூர்யா நடிப்பில் வெளியான காக்க காக்க படத்தின் சில படப்பிடிப்புகளும் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.