அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து!!

 


உலக்கிண்ண ரி20 தொடரில் இன்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் இங்கிலாந்து அணி இலங்கை அணியை வீழ்த்தி 4 விக்கெட்டுக்களால் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.


போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.


அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 141 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.


இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸங்க அதிகபட்சமாக 67 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.


பந்து வீச்சில் மார்க் வுட் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.


142 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.


அவ்வணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய எலக்ஸ் எல்ஸ் அதிகபட்சமாக 47 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.


ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடிய பென் ஸ்டொக் 42 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.


பந்து வீச்சில் லஹிரு குமார, வனிந்து ஹசரங்க மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை பெற்றுக் கொண்டனர்.


இந்த வெற்றியை தொடர்ந்து இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறும் அதேவேளை, அவுஸ்திரேலியா அணிக்கான அரையிறுதி வாய்ப்பு பறிபோகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.