FIFA 2022 – முக்கிய நான்கு போட்டிகள் இன்று!

 


22 ஆவது உலகக்கிண்ண உதைப்பந்து தொடரில் இன்று கானா மற்றும் போர்த்துகல் அணிகள் மோதவுள்ளன.


கடந்த ஞாயிற்றுக்கிழமை மிக கோலாகலமாகத் தொடங்கிய FIFA உலகக்கிண்ணத் தொடரின். 5-வது நாளான இன்று 4 போட்டிகள் இடம்பெறவுள்ளன, அந்த வகையில்  முதல் போட்டியில் சுவிட்சர்லாந்து – கெமரூன் அணிகள் மோதுகின்றன. அடுத்த போட்டிகளில் உருகுவே – தென் கொரியா, போர்த்துகல் – கானா, பிரேசில் – செர்பியா ஆகிய அணிகள் மோதவுள்ளன.


இந்நிலையில், இதுவரை இடம்பெற்ற போட்டிகளில் ஆர்ஜன்டீனா, ஜேர்மன் ஆகிய பலம்வாய்ந்த அணிகள் தோல்வியடைந்துள்ளதால் பிரேசில், போர்த்துகல் அணிகளின் போட்டிகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ஆசியாவில் இறுதியாக இடம்பெற்ற உலகக் கிண்ணத்தின் போது பிரேசில் அணி கிண்ணத்தை வென்று. தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது. இந்த உலகக் கிண்ணத்தில் தரமான அணி பிரேசில் என் பெயரையும் பெற்றுள்ளது.


இன்றைய போட்டிகளில் பிரபல வீரர்களான பிரேசிலின் நெய்மர், போர்த்துகலின் ரொனால்டோ ஆகியோரின் பங்களிப்பு அதிகக் கவனத்தை ஈர்க்கவுள்ளன. தனது கடைசி உலகக் கிண்ணத்தில் 37 வயது ரொனால்டோ விளையாடவுள்ளார். மென்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து விலகிய ரொனால்டோ இந்தப் போட்டியில் கவனச்சிதறல் இல்லாமல் விளையாட வேண்டும், கடைசி உலகக் கிண்ணத்திலாவது அவர் உலகக் கிண்ணத்தை கையில் ஏந்த வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம். 2006 ஆம் அண்டுக்குப் பின் உலகக் கோப்பை காலிறுதியில் போர்த்துகல் தகுதி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.