ராஜபக்க்ஷ மீண்டும் வந்தார்!!

 



இலங்கையில் கடந்த மே மாதம் 9 ஆம் 10 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறிகளின் போது தங்காலையில் அமைக்கப்பட்டிருந்த டி.ஏ.ராஜபக்சவின் உருவச்சிலை போராட்டகாரர்களால் அடித்து உடைக்கப்பட்டது.


நிலையில் உடைக்கப்பட்ட அந்த உருவச்சிலை மீண்டும் மறுசீரமைக்கப்பட்டு அதே இடத்தில் இன்று நிறுவப்பட்டுள்ளது.


இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.


டி.ஏ. ராஜபக்சவின் நினைவு தினம் எதிர்வரும் 6 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட உள்ளதுடன் அன்றைய தினம் சிலை மீண்டும் திறந்து வைக்கப்படும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


உருவச்சிலையை உடைப்பதற்காக சென்ற திட்டமிட்ட குழுவினருக்கு சட்டத்தின் மூலம் தண்டனை கிடைக்க வேண்டும் என்பது தனது நம்பிக்கை எனவும் நாமல் கூறியுள்ளார்.

டி.ஏ. ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச உட்பட ராஜபக்ச சகோதரர, சகோதரிகளின் தந்தை என்பதுடன் அவர் அமைச்சராகவும் நாடாளுமன்ற பிரதி சபாநாயகராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.   

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.