யாழ் - கொழும்பு அதிசொகுசு பேருந்து விபத்து!!

 



வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில்,  யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்தனர்.


 சனிக்கிழமை (05) நள்ளிரவு 12.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.


இந்த சம்பவத்தில் 17 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.


யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதி சொகுசு பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து நொச்சிமோட்டை பாலத்தில் மோதிக் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.


இதன்போது பேருந்து சாரதி மற்றும் பெண்ணொருவர் உட்பட மூவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தததுடன், குறித்த பேருந்தில் பயணித்த 17 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


அதில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.