விடுதலைப்புலிகளின் தலைவரின் வீடு இராணுவமயம்!

 




யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் வீடு, இராணுவம் மற்றும் பொலிஸாரின் உச்ச பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.


அப்பகுதியில் இராணுவத்தினர் , பொலிஸார் , புலனாய்வு பிரிவினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.


அதேவேளை வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் உள்ள மாவீரர் நினைவிடத்தினை சிரமதானம் மூலம் துப்பரவு செய்ய இராணுவத்தினர் தடை விதித்தனர்.


எனினும் இராணுவத்தின் தடைகளை மீறி துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , துப்பரவு பணிகளை மேற்கொண்டவர்களை இராணுவத்தினர் ஒளிப்படங்கள் எடுத்து, அச்சுறுத்தும் பாணியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


மேலும் மண்ணுக்காக தம்முயிரை கொடையாக்கிய மாவீரர் நாள் எதிர்வரும் 27ஆம் திகதி தாயகம் முழுவதும் அனுஸ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.