இளம் தம்பதிகளுக்கு நேர்ந்த கதி!

 


புடவை விற்பனை நிலையத்திற்குள் புகுந்த கும்பல் ஒன்று தம்பதிகள் மீது நடத்திய வாள்வெட்டு தாக்குதலில் கணவன் உயிரிழந்துள்ளார்.


சம்பவத்தில் மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.




குறித்த சம்பவம் ஹிக்கடுவ பகுதியில் இன்று காலை இடம்பெற்றிருக்கின்றது.


படுகாயமடைந்த பெண் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவவதாக கூறப்படும் நிலையில் சம்பவத்தில் 29 வயதுடைய கணவன் உயிரிழந்துள்ளார்.


மேலும் காரில் வந்த இருவரே இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறநிலையில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.   

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.