வவுனியாவில் மோப்ப நாய்கள்!
வவுனியா, நெளுக்குளம் பொலிசார் மோப்ப நாயின் துணையுடன் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
போதைப் பொருள் பாவனை மற்றும் விநியோகம் என்பவற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா, நெளுக்குளம் சந்திப் பகுதியில் இன்று (04.11) காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அண்மைக்காலமாக வடக்கில் போதைப் பொருள் பாவனை மற்றும் பரிமாற்றம் என்பன அதிகரித்துள்ளதுடன், வவுனியாவிலும் போதைப் பாவனை அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் போதைப் பொருள் கடத்தல், போதைப் பொருள் விற்பனை மற்றும் பாவனை என்பவற்றை கட்டுப்படுத்தும் வகையில் நெளுக்குளம் பொலிசார் மோப்ப நாயின் துணையுடன் வீதியால் சென்ற பேரூந்துகள், சொகுசு வாகனங்கள்ட என்பவற்றை மறித்து சோதனையிட்டதுடன், சந்தேகத்திற்கிடமான இடங்கள் மற்றும் நபர்களையும் சோதனை மேற்கொண்டனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை